Verse in Versions - தமிழ் வேதாகமங்களின் ஒற்றுமைத் திரட்டு

வேத-வரிகள் 185
சங்கீதம்-111:10

சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்திற்குத் துவக்கம்; அவைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அப்படிக்கொத்தவன் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

திருவிவிலியம்; (பொது-1995)
ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.

பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
தேவனுக்கு பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கம். தேவனுக்கு கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள். என்றென்றும் தேவனுக்கு துதிகள் பாடப்படும்.


உருவாக்கம்:
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா