சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
எனக்காக உபவாசம்பண்ணி 3-நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருங்கள்; நானும் என் குமரிப் பெண்களும் உபவாசம்பண்ணுவோம்; இந்தப் பிரகார மாக நியாயப்பிரமாணத்தை மீறி இராசாவண்டைக் குட் பிரவேசிப்பேன்; நான் மடிந்தாலும் மடிகிறேன்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலும் இருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங் கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்வித மாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப் பேன்; நான் செத்தாலும் சாகிறேன்.
திருவிவிலியம்; (பொது-1995)
எனக்காக நோன்பிருந்து 3-நாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத் திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
எனக்காக உபவாசம் இருங்கள். 3-நாட்கள் இரவும் பகலும் உண்ணாமலும் குடியாமலும் இருங்கள்; நானும் என் வேலைக்காரப் பெண்களும் உபவாசமிருப்போம்; அழைப்பின்றி சட்டத்திற்கு எதிராய் அரசனிடம் போவேன். நான் மரித்தால் மரிக்கிறேன்..